ஏழை மக்களின் வாழ்வாதார நிலை
குடிசை வாழ் பகுதிகள், தொழிலாளர்கள் குடியிருப்புகளில் ஆய்வு செய்தபோது ஒரு வீட்டில் அனைவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்தும் நிலைமை உள்ளது. அப்போது கூட கடன் இல்லாமல் வாழ முடியவில்லை. சாதாரண ஏழை பெண்கள் குடும்பத்தை நடத்த மைக்ரோ பைனான்ஸ், சுய உதவி குழுக்களிடம் கடன் வாங்குகிறார்கள். எனவே விலைவாசி உயர்வு, கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அரசின் கொள்கைகள் மாற வேண்டும்.
பாஜக அரசின் விலைவாசி கொள்கை
ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வரும்போது சமையல் எரிவாயு விலை 450 ரூபாய். இப்போது 1350 ரூபாய் உயர்ந்து, தேர்தலுக்காக 400 ரூபாய் குறைத்துள்ளது. பெட்ரோல் விலை 70 ரூபாயிலிருந்து 103 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அனைத்தும் உயரும், உணவு பற்றாக்குறை ஏற்படும்.
‘தேசப்பற்று’ வியாபாரம்
பாகிஸ்தான் தாக்குதல் நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி செல்லவில்லை. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே சென்று பார்த்தது. ஒன்றிய பாஜக அரசு தேசப்பற்று, கடவுள் பற்றை வியாபாரம் செய்ய, கலவரம் செய்ய பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு வறுமையை ஒழிப்போம் என பாஜக போராட்டம் நடத்தியதுண்டா?
பார்டர் தோட்ட மக்களுக்கு வீடு கோரிக்கை
சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்ட பகுதியில் 70 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு அரசு தனியார் இடத்தை கையகப்படுத்தி உரிய விலை கொடுத்து வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு ஏன் தயங்குகிறது?
மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்!
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பார்டர் தோட்டம் பகுதி - பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உரையில் இருந்து.