tamilnadu

அதிமுக தேரூர் பேரூராட்சி தலைவியை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தேரூர் பேரூராட்சி தலைவியை  தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில், மே 16 - அதிமுக தேரூர் பேரூராட்சி தலை வர் பதவியை தகுதி நீக்கம் செய்ய ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 2022 ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் தேரூர் பேரூ ராட்சி பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண்.2 இல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.  இந்த தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமுதாராணி 2005-இல் கிறிஸ்தவ ராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை மறைத்து தன்னுடைய பிறப்புச் சான்றிதழை ஊராட்சி மன்றத் தேர்தலில் கொ டுத்து, தலைவர் பதவிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோ தம். எனவே தேரூர் பேரூராட்சி மன்றத்  தலைவராக உள்ள அமுதாராணி பட்டியல் இன சாதிச் சான்றிதழை ரத்து  செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்த ரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறி யிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், நீதிபதி பிறப்பித்த  உத்தரவு வருமாறு:  இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த  ஒருவர் கிறிஸ்தவ சட்டங்களை பின் பற்றி கிறிஸ்தவரை திருமணம் செய்த தற்கான அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பேரூராட்சி தலைவர்  பதவிக்கு மனுதாரர் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோதே தேர்தல் அதி காரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் ஒருதலைபட்சமாக தேர்தல் அதி காரிகள் செயல்பட்டு உள்ளனர். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக வலிமைமிக்க நாட்டில், பொதுமக்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதி நிதிகளை தேர்ந்தெடுப்பது தான் ஜன நாயகத்தின் உயிர்நாடியே. இந்த நடை முறை அரசியல் அமைப்புச் சட்டத்தால்  வழிநடத்தப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியின் பகடை காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறுகின்றனர். இது போன்று தேர்தல் அதிகாரிகள் செயல்படுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவது போன்று உள்ளது.  இந்த வழக்கில் ஊராட்சி மன்ற  தலைவர் வெற்றியை உறுதி செய்யும்  வகையில் நெல்லை மாவட்ட ஆதிதிரா விட நலத்துறையின் உறுப்பினர் செய லர், அமுதாராணிக்கு ஆதரவாக செயல்பட்டு அறிக்கை அளித்து உள்ளார். அவரது அறிக்கை ரத்து செய் யப்படுகிறது. அமுதா ராணி திருமண  சான்றிதழ் மூலம் அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியது தெரிய வந்து உள்ளது. மனுதாரர் ஒரே நேரத்தில் இரு  வேறு சலுகைகளை அனுபவிக்க இய லாது.  இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத் தின்படி கிறிஸ்தவர் ஒருவரை திரு மணம் செய்து கொண்டு, பொது வேலைக்காக தன்னை இந்து என  அடையாளப்படுத்துவது ஏற்கத்தக்க தல்ல. ஆகவே தேரூர் பேரூராட்சி மன்றத்  தலைவராக அமுதாராணி தேர்வு செய்யப்பட்டதை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.