tamilnadu

பண அறுவடையைத் தொடங்கி விட்டனர் கல்வி வியாபாரிகள் மௌனம் கலைக்குமா தமிழக அரசு?

மதுரை, ஜூலை 9- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யாகாத நிலையில், மதுரையில் பல தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க் கையில் தீவிரம் (பண அறுவடை) காட்டி வருகின்றன என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 785 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 105 அரசுக் கல் லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், மற்றவை அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகள். தவிர பொறி யியல் கல்லூரிகள், கல்வியியல் கல் லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் பள்ளிகளிலேயே, ‘மாண வர் சேர்க்கை நடத்தக்கூடாது, கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. இதுகுறித்து மதுரை கல்லூரி முன் னாள் முதல்வரும், தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளருமான பேராசிரி யர் இரா.முரளி தீக்கதிர் செய்தியாளர் களிடம் பேசுகையில், “தனியார் கல் லூரிகளில் மாணவர் சேர்க்கை நடை முறைகள் ஆன்லைன் வாயிலாகத் தொடங்கிவிட்டன என்று எங்களுக்கு புகார்கள் வந்திருக்கின்றன. மதுரை யைப் பொறுத்தவரையில் அமெரிக் கன் கல்லூரி, லேடிடோக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் ஆன் லைன் வாயிலாக விண்ணப்பங்கள் கொடுத்து வருகிறார்கள். மதுரைக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரப் பலகை வைத்துள்ளது.

மதுரை மட்டுமல்ல தமிழகம் முழு வதும் இதுதான் நிலை. பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப் படையில்தான் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது அரசு விதி. தேர்வு முடிவு வரும் முன்பே விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் வசூலிப்பது பேருந்தில் ஜன்னல் வழி யாகப் துண்டைப் போட்டு இடம்பிடிப் பது போலத்தான் என்றால் மிகையல்ல. இதில் மெரிட் முறையோ, இட ஒதுக்கீடோ பின்பற்றப்பட வாய்ப்பு இல்லை. நாட்டில் மக்கள் பசியாலும், நோயாலும் செத்துக்கொண்டிருக்கும் போதும், பணத்தின் மீதே கல்லூரிகள் குறியாக இருப்பது அதிர்ச்சியளிக்கி றது” என்றார். பல கல்லூரில் “ஏ” கணக்கு, “பி” கணக்கு என இரண்டு வைத்துள்ளன. “ஏ” கணக்கு அரசுக்குக் கொடுப்பது. “பி” கணக்கு கல்லூரிகளே நிர்வ கித்துக்கொள்வது. குறிப்பாக வங்கி கள் மூலம் கல்லூரிகளுக்கு பணம் செலுத்தினால் மூன்று செலான்கள் இருக்கும். ஒன்று மாணவருக்கு, மற் றொன்று கல்லூரிக்கு, மற்றொன்று வங்கிக்கு. இதில் மாணவருக்கான செலானை கல்லூரி நிர்வாகமே வைத்துக்கொள்ளும். இதை வங்கி யில் கேட்டாலும் தர மாட்டார்கள். இன் றைக்கு ஆன்லைன் முறை வந்துவிட்ட தால் கல்லூரி நிர்வாகம் வாங்கும் உண்மையான பணம் என்னவென்பது தெரியாமலே போய்விடும். பல கல்லூரிகள் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் அதிகமாணவர்கள் சேரு வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே கூடுதலாக இடம் வேண்டு மென குறைந்தபட்சம் 25 சதவீத இடங்க ளைப் பெறுவார்கள். இது முழுக்க முழுக்க வியாபாரமயமாக்கப்படும். இது தமிழக அரசிற்கோ, உயர் கல் வித்துறைக்கோ தெரியாத ஒன்றல்ல. ஆனால், அவர்கள் கண்டுகொள் மாட் டார்கள். இளநிலைப் பட்டப் படிப்புகளுக் கான கல்விக் கட்டணம் அனைத்தும் இலவசம் என்று அரசு அறிவித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அப்ப டியே பல்கலைக்கழகக் கட்டணம், நூலகக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தாலும்கூட, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.காம். படிப் புக்கு 1,000 ரூபாயும், பி.எஸ்சி. பாடப் பிரிவுகளுக்கு 2000 ரூபாயும்தான் வரும். ஆனால், பெரும்பாலான கல் லூரிகள் 25 ஆயிரம், 30 ஆயிரம் என்று கட்டணம் வசூலிக்கின்றன. குறிப்பாக கல்வி வியாபாரத்திற் கென்றே சுயநிதிக் கல்லூரிகளை திறந்துவிட்டுள்ளன. இவை அனைத் தும் கிராமப்புற தலித் மற்றும் ஏழை- எளிய விவசாய கூலித் தொழிலாளர் களின் குடும்பங்களை கருத்தில் கொண்டே தொடங்கப்பட்டுள்ளன. அவர் களது குறிக்கோளும் அதுதான். அதா வது மொத்த கல்விக் கட்டணமே ரூ. 2,000 என வைத்துக்கொண்டால், சுய நிதிக் கல்லூரிகள் கிராமப்புற தொழி லாளர் வீட்டு மாணவர்களிடம் வரு டத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கின்றன. கிரா மப்புற தொழிலாளர்களும் தங்களது பிள்ளைகள் டிகிரி முடித்தால் நல்லது என நினைக்கிறார்கள்.

குறிப்பாக இந்த மாணவர்கள் மேல்நிலைக்கல்வி யில் குறைவான மதிப்பெண்கள் பெற் றிருப்பார்கள். அவர்களது கல்விச் சூழலும், வாழ்க்கைச்சூழலும் அவ்வா றுதான் தகவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பி.ஏ,. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு கிராக்கி அதிகம். சுயநிதிக் கல்லூரிகளில் எந்தக் கட்டுப் பாடும் கிடையாது. அவர்கள் எழுதிய தும், வைத்ததுதான் சட்டம். இதை தமி ழக அரசு முறைப்படுத்தவில்லை. கல்லூரிகள் மட்டுமல்ல பள்ளிகளி லும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயி ரம் வரை கல்விக்கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சரும், உயர் கல்வி அமைச்ச ரும் ஆன்லைன் கல்வி, இணையதளக் கல்வி, தொலைக்காட்சி மூலம் கல்வி என தினம்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது அவர்கள் பார்வை திரும்பவேயில்லை. தனியார், பள்ளி கல்லூரிகளுக்கு இது “வியாபார காலம்” இந்தாண்டு கூடுதலாக கொரோனா தொற்று பரவி யுள்ளது. அறுக்க வேண்டிய காலத்தில் அறுவடை செய்தே ஆக வேண்டு மென்ற நோக்கத்தோடு கல்வி வியா பாரிகள் களத்தில் குதித்துவிட்டார்கள். தமிழக அரசு கல்வி வியாபாரிகளிடம் கறாராக நடக்கவில்லையெனில் பல்லாயிரக்கணக்கான மாணவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியா கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  புகாரே வரவில்லை என்பதற்காக நமக்குத் தெரிந்தே நடக்கும் முறை கேடுகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் முறைகேடுகளுக்குத் துணைபோவது மாதிரிதான். இதைப் புரிந்துகொண்டு இந்த விவகா ரத்தில் இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென் றார்.