சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம்
சென்னை மடிப்பாக்கத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள 8ஆவது குறுக்கு தெருவில் கடந்த 3 வாரங்களாக கழிவுநீர்கால்வாய் உடைந்து திறந்த நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் அப்பாதையில் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விபத்தை தடுக்க தற்காலிகமாக சிமெண்ட் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தாலும் அது எள்ளளவும் பாதுகாப்பு இல்லை எனவும் வாகனம் செல்வதற்கு சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் வருகின்றனர். சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? … படம்: செ.தமிழினியன்