tamilnadu

img

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் டெல்டா பகுதியில் சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரம்

சிதம்பரம், ஜூன் 19- ஒன்றிய பாஜக அர சின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 11-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்க நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், டெல்டா பகுதியான சிதம்ப ரம், காட்டுமன்னார்கோவில், திரு முட்டம், பரங்கிப் பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மக்களை சந்தித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி தமிழக அரசு செய்ய வேண்டிய கோரிக்கை கள் குறித்து கிளர்ச்சி பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரம் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகே மக்கள் சந்தி ப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. நகர்க்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு கருப்பையன், முத்தத் தலைவர் மூசா, நகர செய லாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமரன், நகர்க்குழு உறுப்பினர்கள் சின்னையன், கனி, கலிய மூர்த்தி, பூபதி உள்ளிட்ட கட்சியினர் சுந்தரமூர்த்தி, நாகராஜ், முஷாரப் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  பிரச்சார இயக்கம் கஞ்சி தொட்டி முனை, வடக்கு வீதி, முத்துமாணிக்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி னர். சிதம்பரம் மந்தகரையில் மூன்றாம் கட்ட நடைபயண பிரச்சாரத்திற்கு கட்சியின் நகர் குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் தலைமை தாங்கினார். பிரச்சார இயக்க நடைபயணத்தை கட்சியின் நகர செயலாளர் ராஜா கொடியை ஏற்றி துவக்கி வைத்தார். பிரச்சார இயக்கம் மண்டகரை, இளமை யாக்கினார் கோயில் தெரு, வானகார தெரு வழியாக காசு கடை தெருவில் நிறைவு பெற்றது. இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர் குழு உறுப்பினர்கள் குமரவேல், அமுதா, பூபதி உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  புவனகிரி புவனகிரி நகரத்தில் சௌராஷ்ட்ரா தெரு பகுதி யில் நடைபெற்ற பிரச்சார பயணத்திற்கு ஒன்றிய செயலாளர் காளி. கோவிந்த ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுப்பராயன், நகர செயலாளர் மணவாளன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சதானந்தம், அன்புதாஸ், அருளானந்தம், மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரத்தை வழங்கினர். பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் பரங்கிப்பேட்டை தெத்து கடை தெருவில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் மூன்றாம் கட்டமாக நடைபெற்றது. இதை மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். நடைப்பயணம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம், பெரிய கடை தெரு, சின்னக்கடை தெரு, சங்கரன்கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.  திருமுட்டம் திருமுட்டம் ஒன்றியம் சார்பில் திருமுட்டம் அண்ணா சிலை அருகே நடைபயண கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தினேஷ் பாபு தலைமை தாங்கி னார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆர். ரவிச்சந்திரன், தேன்மொழி, பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்ட பிரச்சார இயக்கம் திருமுட்டம் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்கள் விரோத கொள்கைகள் குறித்து துண்டு பிரசுரத்தை வழங்கி னர். கீரப்பாளையம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் பொன்னங் கோவில் கிராமத்தில்  ஒன்றியச் செயலாளர் செல்லையா தலைமையில்  பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. இதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்புராயன் துவக்கி வைத்தார். பிரச்சார இயக்கம் 2 கி.மீ தொலைவில் உள்ள சாத்த மங்கலம் கிரா மத்தில் நிறைவுபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சி நாதன் கிளர்ச்சி பிரச்சா ரத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குண சேகரன், செம்மலர், ஜெயந்தி, ராஜ்குமார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.