விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிபிஎம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மயிலாடுதுறை, ஜுன் 13 மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், நல்லாடை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், மக்கள் சந்திப்பு இயக்க பிரச்சார தெருமுனைக் கூட்டம் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன், ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்தின், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து உரையாற்றினர். தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.