உலகச்சூழல் மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஒருவார காலத்திற்குள் டொனால்டு டிரம்பின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை எதிர்த்து அமெரிக்காவில் 2000 இடங்களில் 120 லட்சம் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போர் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானது. இஸ்ரேல், ஈரானை தாக்கியது குறித்து இந்திய அரசு வாய் திறக்க மறுக்கிறது. ஏகாதிபத்திய யுத்த அரசியலுக்கு எதிராக சமாதானம், உழைக்கும் வர்க்கத்தின் நலனையும் முன்னிறுத்துவோம். காற்று நுழைய முடியாத இடத்தில் கூட பாஜக வெறுப்பு அரசியலைப் பரப்புகிறது. பாஜகவின் அடையாள வெறுப்பு அரசியல், பொருளாதார சுரண்டலை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தின் நலன்களை காவு கொடுத்தது. தற்போது மீண்டும், பாஜக-அதிமுக அணி உருவாகி உள்ளது. அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வோம். உள்ளூர் பிரச்சனைகளில் நீடித்த நிலையான போராட்டத்தை தொடர மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு முடிவெடுத்துள்ளது. அதனை தொடர்வோம். சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் பேசியதிலிருந்து...