tamilnadu

img

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய் - சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை,டிசம்பர்.15- அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரி யத் தலம் அமைந்துள்ள பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்ப தற்கான ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறு வனத்திற்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேலூரில் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500க்கும் மேர்ப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி அரசுக்கு வேதத்தின் மீதான விசுவாசத்தை விட வேதாந்தா நிறுவனத்தின் மீதான விசுவாசம் அதிகம். அதனால் தான் டங்கஸ்டன் ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்ய மறுக்கிறது. ஒன்றிய அரசின் மெளனம் கலைக்க ஏல ஒப்பந்த நகல் எரிப்பு போராட்டம் நடத்துவோம் என இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.