கிருஷ்ணகிரி, ஆக. 19- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டம் சந்தனப் பள்ளி ஊராட்சியில் ஏணிமுச்சந்தி ரம், சிக்கேபுரம் கிராமங்கள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களின் அருகில் எஸ்.வி.கே. என்ற தனியார் கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழிப் பண்ணையின் கழிவுகள், இறந்த கோழிகள் ஆகியவற்றை கிராமத்தின் அருகிலும், கழிவுநீர் கால்வாயிலும், திறந்த வெளியிலும் போடுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவ துடன், புழுக்கள்மொய்த்து, நச்சு ஈக் களால் தொற்று நோய் ஏற்படும் அபா யம் உள்ளது. மேலும் இதனால் பிற கால்நடைகளுக்கும் நோய் ஏற்படுகி றது. இதுகுறித்து இரு கிராம மக்க ளும் பல முறை அரசு அதிகாரிகளி டம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கோழிப்பண்ணை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கழிவுகளை உடனே அப் புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் கிராம மக்கள் ஆடு, மாடுகளுடன் கோழிப் பண்ணை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் அனுமப்பா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டச் செயலாளர் பிர காஷ், துணை தலைவர் சீனிவாசன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் முத்து, தலைவர் பட்டாபி, துணைத் தலைவர் கணேஷ், சிவராஜ், சி.பி.எம். செயற்குழு உறுப்பினர் சேகர், வட்டச் செயலாளர் வெங்கடேஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.