உதகை/ கொடைக்கானல்,அக்.01- வெளியூரில் இருந்து உதகை மற்றும் கொடைக்கானலுக்குச் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் கோடைவிடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மே 7 முதல் ஜூன்30ஆம் தேதி வரை வெளியூரிலிருந்து உதகை மற்றும் கொடைக்கானல் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவு வரும் வரை இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது