tamilnadu

img

யுஏஇ தூதரகம்- யூனிடாக் கட்டுமான ஒப்பந்தம்: காங்- பாஜக- ஊடக பொய் பிரச்சாரம் அம்பலம்

திருவனந்தபுரம், ஆக.23- ரெட் கிரசன்டுக்காக யுனிடாக் நிறு வனத்துடன் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டது யுஏஇ தூதரக ஜெனரல் என்பது வெளியானதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கேரள அர சின் மீது காங்கிரசும் பாஜகவும் சில ஊடகங்களும் கூறிவந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பொய் என்பது அம்ப லமானது.   கேரளத்தில் 2018-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக் கான வீடுகள் தகர்ந்தன. அவர் களுக்கு புதிய வீடுகளை கேரள அரசு லைப் திட்டத்தின் கீழ் கட்டித் தருகிறது. வளைகுடா நாடுகளில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான ரெட்கிரசன்ட் (இந்தியா வில் ரெட்கிராஸ்) ரூ.20 கோடி மதிப் பீட்டில் வடகஞ்சேரியில் அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தருவதாக கேரள அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி கட்டுமானத் துக்கான நிலத்தை கேரள அரசு வழங்கியது. கட்டடங்களை கட்டி முடித்து அரசிடம் திருப்பி ஒப்ப டைக்க வேண்டும் என்பது புரிந்து ணர்வு ஒப்பந்தம். இந்நிலையில் ரெட்கிரசன்டுக் காக யுஏஇ தூதரக ஜெனரல் யுனி டாக் என்கிற கட்டுமான நிறுவனத்துட னும், மருத்துவமனைக்காக எர்ணா குளத்தைச் சேர்ந்த சென் வெஞ் சர்ஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். இரண்டு நிறுவனங்களும் டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஒப்பந்தம் ஜூலை 31, 2019 அன்று கையெழுத்தானது. தூதரக ஜெனரல் முதல் நபராகவும் யுனி டாக் இரண்டாவது நபராகவும் கை யெழுத்தாகி உள்ளது. மருத்துவ மனைக்கும் இது போன்ற ஒப்பந்தம் உள்ளது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துடன் தொடர் பில்லாத ஒரு நிறுவனம் கேரளாவுக்கு வந்ததாகவும், ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கேரள அரசுடன் சேர்ந்து முறைகேடுகளைச் செய்துள்ளது என்பதாகவும் நடத்தப்பட்டு வந்த பெரிய அளவிலான பிரச்சாரம் பிசு பிசுத்துப் போனது. கட்டுமான ஒப்பந்தமோ அல்லது அது தொடர்பான பணப்பரிமாற்றமோ மாநில அரசுக்கு சம்பந்தமில்லாதது என்பதையும் இந்த ஒப்பந்தம் தெளிவு படுத்துகிறது. இதை பத்திரிகையாளர் சந்திப்புகளில் முதல்வர் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதே குற்றச்சாட்டு களை மீண்டும் மீண்டும் கூறி வந்தன. வடகஞ்சேரியில் சுமார் 140 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டுவதற்கானது இந்த ஒப் பந்தம். 70 லட்சம் யுஏஇ திர்ஹம் மதிப் பிலான டெண்டர் அடிப்படையில் ஒப் பந்தம் கையெழுத்திடப்பட்டதாக ஆவணம் கூறுகிறது. மருத்துவ மனையை நிர்மாணிப்பதற்கான ஒப் பந்தம் 30 லட்சம் திர்ஹத்திற்கானது. அதன்படி தாய்- சேய் மருத்துவ மனை கட்டுமானத்தில் உள்ளது. சொப்னாவின் வங்கி லாக்கரில் இருந்த ஒரு கோடி ரூபாயுடனும் கேரள முதல்வருடனும் தொடர்பு படுத்தி நடந்தப்பட்ட பிரச்சாரத்தை இந்த ஆவணங்கள் தகர்த்துள்ளன.