கரூர், செப்.17- ரயில்வேயை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுப்பதை கண்டித்தும், கட்டாய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிணா ரயில்வே எம்பிளாயீஸ் யூனியன் கரூர் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் ரயில்வே சந்திப்பு நிலை யம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஐ.சக்திவேல் தலைமை வகித்தார். கோட்ட பொருளாளர் எம்.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். டிஆர்இயு மண்டல துணை செயலாளர் சாம்பசிவன், சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி. முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் கந்தசாமி, கிருஷ்ண மூர்த்தி, தண்டபாணி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசு களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். கிளை செயலா ளர் ரத்தினம் நன்றி கூறினார்.