tamilnadu

தூக்கில் தொங்கிய பெண் சடலம் மீட்பு

நாகர்கோவில், ஜூன் 30- குமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியை சேர்ந்த வர் ஜாண்சன். தோட்ட தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி விமலா. இவர்கள் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் திங்களன்று வீட்டில் விமலா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குலசேகரம் காவல் துறையினர் ஜாண்சனி டம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், தூக்கில் தொங்கிய விமலாவின் சடலம் சந்தேகம் அளிக்கும் வகையில்  தொங்கியதால் காவல் துறையினர் ஜாண்சனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.