நாகர்கோவில், மார்ச் 8- கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள், முன்னேற்றம் குறித்த மாவட்ட அலுவலர்களுடனான ஆலோ சனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களு டன் பல்வேறு துறைகள் வாயிலாக நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். முந்தைய ஆலோசனை கூட் டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்து, அதை செயல் படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் அதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்கி, வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கவும், தரமானதாகவும் இருக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென அறி வுறுத்தினார். மேலும், வனத்துறையின் ஒப்புதலோடு, சாலை பாதுகாப்பு மற்றும் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் நிதி யின் கீழ், பாலமோர் சாலை மற்றும் கல்வெட்டு புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளை விரைந்து செயல படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத் தின் முக்கியத்துவத்தை உணர்த்திட பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை செயல்படுத்த அலுவலருக்கு அறி வுறுத்தப்பட்டது. மேலும், மக்கள் நலவாழ்வு துறை மூலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்காத வகையில் மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகளை ஏற்படுவத்துவதோடு, பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள தங்கள் கைகளை சோப்பால் நன்றாக கழுவி சுத்தமாக வைக்க வேண்டும். தும்மலோ, இருமலோ வந்தால் பிறரை பாதிக்காத வகையில் பாதுகாப்பாக கைகுட்டையையோ அல்லது முகமூடி பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். நமது மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனாலும், பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், மக்கள் நலவாழ்விற்கும் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதன்மூலம் நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழும். எனவே, மக்கள் நல வாழ்வு அலுவலர் உரிய பாதுகாப்பு நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார். மேலும், மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொதுப்பணித்துறை மூலம் நடை பெற்று வரும் கட்டிட பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மழைக் காலத்தை முன்னிட்டு விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், எஞ்சிய நிலுவையிலுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினார். வளர்ச்சித்திட்ட பணி களை செயல்படுத்துவதில் இடையூறு ஏதும் இருந்தால் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து சென்று திட்டமிட்ட பணிகளை விரை ந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட் டது.