tamilnadu

img

குளத்தை தூர்வாரும் பொதுமக்கள்

காஞ்சிபுரம், மே 29-காஞ்சிபுரம் பெருநகராட்சியில்  13வது வார்டில்பொதுமக்கள், கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் முறையான பராமரிப்பு இல்லாததால், செடி,கொடிகள் வளர்ந்து காடுபோல் கிடந்தது. குளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலஆண்டுகளாக நகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் இதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.இந்தப் பகுதியில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாககுறைந்துள்ளது. கோடைக்குபிறகு மழை இருக்கும் என்பதால்  கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெரு, எஸ்.வி.என் தெருவில் வசிக்கும் மக்கள் தாங்களேமுன்வந்து, அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த செலவில், பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு 5 நாட்களாக குளத்தை தூர்வாரி வருகின்றனர்.இது குறித்து சிபிஎம் கிளை உறுப்பினர் பரந்தாமன் கூறுகையில், ‘170 அடி நீளம், 110 அடி அகலம் உள்ள இக்குளத்தை, 5 அடி ஆழத்திற்கு தூர்வாரியிருக்கிறோம். மேலும், கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றது. கோடை மழையை சேமித்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க இந்தப் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.