tamilnadu

img

சகஜானந்தா பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு தமிழக அரசுக்கு சிதம்பரம் மக்கள் நன்றி

சிதம்பரம், மார்ச் 24 - சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்ட மன்றத்தில் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து,  பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்ட மாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இருந்தபோது சிதம்பரத்தில் ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி கல்வி ஒன்றே என்ற நிறுவனங்களை நிறு வினார் சுவாமி சகஜானந்தா. இவர் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் 35 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள இவருக்கு அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2012 ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம்  மனு கொடுத்தும், சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினார்.  இதனைத்தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் சுவாமி சகஜானந்தா வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என  முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் முடிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இந்நிலையில் சுவாமி சகஜானந்தா  பிறந்த நாளான ஜனவரி 27ஆம் தேதியை அரசு விழாவாக நடத்த வேண்டும் என தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,  மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா மற்றும் மணிமண்டப நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி  நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் சகஜானந்தா வின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என துறை அமைச்சர் அறிவித்தார்.  இதனை யடுத்து மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கற்பனை செல்வம், நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, நந்தனார் கல்விக் கழக உறுப்பினர்  ஜெயச்சந்திரன், நந்தனார் பள்ளியின் முன்னாள் மாணவர் விமல் குமார் குமராட்சி ஒன்றிய கவுன் சிலர் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.  மேலும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் துணை முதல்வர் துறை அமைச்சர் உள்ளிட்ட இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.   35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு சட்டமன்ற தந்தையாக செயல்பட்ட  சகஜானந்தா  உருவப்படத்தை சட்டப்பேரவையில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை விரை வில் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.