tamilnadu

முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம் விநியோகம்

கடலூர், ஜூன் 17- கடலூர் அரசு கல்லூரியில் முதுகலை பட்டப்  படிப்பிற்கான விண்ணப்பங்களை திங்கள் கிழமை பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ப. குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பது:- கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி யில் 2019-20 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு பயில விண்ணப்பப் படிவம் 17ஆம் தேதி வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப வழங்கவும் ஜூலை 5 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தின் விலை ரூ.60, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் சாதி சான்றிதழ் நகல் அளித்து ஒரு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இக்கல்லூரியில் 2019-20 ஆம் கல்வி யாண்டில் முதலாமாண்டு இளநிலை பட்ட  வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வரும்  19 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் வகுப்புகள் துவங்குகிறது. எனவே, முதலாமாண்டு மாண வர்கள் கல்லூரிக்குரிய சீருடையில் வருகைப் புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.