சிதம்பரம், அக். 24- சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் லால்பேட்டையில் கடந்த சில நாட்க ளாக பெய்த தொடர் மழையின் காரணமாக தேசியநெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இருவர் அந்த பள்ளத்தில் விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்து புதியசாலை அமைக்கவேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி உள்ள குட்டையில் மீன் விடும் போராட்டத்தை நடத்தினர். கட்சியின் வட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், செயற் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, காட்டு மன்னார்குடி, குமராட்சி வட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், கமலக்கண்ணன், காளிதாஸ், அப்துல் அஜீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காட்டு மன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ் செல்வன், வருவாய்த்துறை, காவல்துறை யினர் அந்த சாலையை தற்காலிகமாக சரி செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.