சிதம்பரம்,ஜூ.13- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு நடந்தது. கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். கார்மாங்குடி வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி ராமலிங்கம், காட்டுமன்னார்கோவில் சங்கர், வாண்டையார் இருப்பு செல்வக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவ டிக்கை குழு இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு அறிமுக உரை யாற்றினார். மருத்துவர் ஜெயராஜ மூர்த்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப் பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிசெல்வன், சென்னை கடற்கரை வளமைய சரவ ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினர். விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான தொல். திருமாவள வன் கலந்து கொண்டு பேசுகையில், “கார்பன் ஹைட்ரோ திட்டத்தினால் டெல்டா பகுதி பாலை வனமாக மாறும். இதை எதிர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார். இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் நன்றி கூறினார்.