tamilnadu

img

கழிவறை கட்டுவதில் முறைகேடு: மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

சிதம்பரம், ஜூலை 20- கீரப்பாளையம் ஒன்றிய  அலுவலகத்தில் நடைபெறும்  பல்வேறு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் முற்று கைப் போராட்டம்  நடை பெற்றது. சிதம்பரம் அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பணியாற்றும் கிரா மப்புற வட்டார வளர்ச்சி அலு வலர் முருகன் ஏற்கனவே  வீடுகளில் கட்டி முடிக்கப்ப ட்ட கழிவறைகளுக்கு, மீண் டும் புதிதாக கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளதைக் கண்டித் தும், எண்ணாநகரம் குளத்  தின்   கரையை பலப்படுத்தா மலே தூர் வாருகிறோம் என்ற  பெயரில், மண்ணை எடுத்து  விற்பனை செய்தது உள்  ளிட்ட பல்வேறு முறைகேடு களை கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.   ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் செல்லையா,  முரு கன், சிவராமன் நெடுஞ்சேர லாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.