1943 - சோவியத் ஒன்றியத்தில், ‘பெலாரஸ் சோவி யத்’திற்குட்பட்ட, ஸாட்டின் (காட்டின்) என்ற கிராமத்தின் மக்கள் அனைவரும், நாஜிப் படைகளால் உயிருடன் எரிக் கப்பட்டனர். ஆப்பரேஷன் பார்பரோசா-வில், நாஜிகள் ஆக்கிரமித்த சோவியத் பகுதிகளுள் பெலாரசும் ஒன்று. இப்பகுதிகளிலிருந்த மக்களே படைகளை அமைத்து, நாஜிப் படைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். அவ்வா றான படைகளுக்கு உதவிய கிராமங்களை நாஜிகள் எரிப்பதும், மக்களைப் படு கொலை செய்வதும் ஏராளமாக நடந்தன. பெலாரசில் மட்டும் 5,295 கிராமங்கள் இவ்வாறு நாஜிகளால் எரித்து, அழிக்கப்பட்டன.
இவற்றின் மக்களும் பெரும்பா லும் படுகொலை செய்யப்பட்டாலும், தப்பியவர்களின் கிராமங்கள் மீண்டும் மீண்டும் நாஜிகளால் எரிக்கப்பட்டன. விடெப்ஸ்க், மின்ஸ்க் ஆகிய இரு பகுதி களில் மட்டும், 36 கிராமங்கள் நான்கு அல்லது அதற்கும் அதிகமான முறைகளும், 123 கிராமங்கள் மூன்று முறையும், 335 கிராமங்கள் இரு முறையும் எரிக்கப் பட்டதாக பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. பெலாரசை ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த மூன்று ஆண்டுகளில், 20 லட்சத்திற்குக் குறையாத பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது, அப்பகுதியின் மொத்த மக்கள் தொகையில் கால் பங்கு ஆகும்! போராடிக்கொண்டிருந்த மக்கள் படையின ரின் தாக்குதலில், நான்கு ஜெர்மன் வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து, இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது.
இந்தப் படுகொலையை நிகழ்த்திய ஷுட்ஸ்மான்ஷாஃப்ட் என்பது, நாம் அறிந்திருக்கிற ஊர்க்காவல் படையைப் போன்ற, ஒரு ‘துணை’ காவல் படையாகும். தாக்குதலை நிகழ்த்திய படைப் பிரிவு, குற்றவாளிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டதாம். அவர்கள், கிராமத்தி லிருந்த அனைவரையும், வைக்கோல் கூரைகொண்ட ஒரு மூடப்பட்ட கொட்ட கையில் அடைத்து, அதற்குத் தீவைத்தனர். தீயிலிருந்து தப்பி வெளியே வந்தவர்களை எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். 75 குழந்தைகள் உட்பட 147 பேர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர்.
இறந்துவிட்டதாகக் கருதி விடப்பட்ட சிறுவன், தாயின் பிணத்திற்கடியில் கிடந்ததால் கண்டுபிடிக்க முடியாத சிறுவன், மறைவிடத்திலிருந்து அன்று முழுவதும் வெளியே வராத சிறுமி என்று மொத்தம் 5 சிறுவர்கள் உயிர்பிழைத்த இந்த நிகழ்வில், ஓர் 56 வயது ஆண் மட்டுமே, உயிர்பிழைத்த ஒரேயொரு வயதுவந்தவர். மிகமோசமான தீக்காயங்க ளுடன் இருந்தாலும், நினைவு திரும்பிய அவர், கருகிய நிலையில் கிடந்த மகனைத் தூக்க, அவர் கைகளிலேயே அவன் உயிர் பிரிந்தது. தானும் கருகிய நிலையில், கருகி இறந்த மகனைக் கைகளில் ஏந்தி அவர் நிற்பது நினைவிடத்தில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக ஊரே கொல்லப்பட்ட நிகழ்வுகளுக்கு குறியீடாக ஸாட்டின் மாறியது!
- அறிவுக்கடல்