tamilnadu

பணியின்போது இறந்த 200 பேருக்கு குடும்ப நலநிதி வழங்காத அவலம்

சென்னை, ஜூலை 18- பணியின்போது இறந்த 200க்கும்  மேற்பட்ட போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு குடும்ப நல நிதி வழங்க வில்லை என்று புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியில்  இறக்கும் தொழிலாளர் குடும்பங்க ளுக்கு 3 லட்சம் குடும்ப நல நிதி வழங்  கப்படுகிறது. இதன்படி 2019ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் மாதம் வரை பணி யில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்  திற்கு குடும்ப நல நிதி வழங்கப்பட வில்லை. மாநகர போக்குவரத்து கழ கத்தில் (சென்னை) 2019 பிப்ரவரி மாதம்  முதல் வழங்கப்படாமல் உள்ளது. “இறந்த தொழிலாளர்களின் பணி முறிவு நற்பயன்களான குடும்ப ஓய்வூதி யம், வருங்கால வைப்புநிதி, பணிக்  கொடை போன்றவற்றையும் வழங்கா மல் உள்ளனர். இவற்றையெல்லாம் விரைந்து வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் கேட்டுக்  கொண்டுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து முதன்மை செயலாள ருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.