tamilnadu

img

ஊழியர் சங்க மாநில மாநாடு: வரவேற்புக் குழு அமைப்பு

திருநெல்வேலி, ஆக.18- நெல்லையில் செப் 28, 29 ஆகிய தேதிகளில் இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் 12 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். முத்தையா வர வேற்று பேசினார். வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட அமைப்பாளர் வீ.பழனி, காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் ஆர்.மதுபால், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், பேராசிரியர் பொன்ராஜ் ஆகியோர் பேசினர்.  மாநில மாநாட்டிற்கான வரவேற்பு குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டு புரவலர்களாக வீ.பழனி,பேராசிரியர் பொன்ராஜ், வரவேற்புக் குழு தலைவராக காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செயலாளர் செ. முத்துக்குமாரசாமி, செய லாளராக வினோத்குமார் மற்றும் 100 பேர் கொண்ட வர வேற்புக் குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது.