மேற்கு வங்கத்தில் மம்தா அரசாங்கம் கோவிட்19 தொற்று பரவலை தடுக்க தேவை யான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கண்டித்து இடதுசாரிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். இந்தியாவிலேயே மிக குறைந்த பரிசோதனைகள் மேற்கு வங் கத்தில்தான் நடந்துள்ளன.