கோபி, நவ. 2- வேளாண் விளைபொருட்களை வரியின்றி இறக்குமதி செய்யும் ஒப்பந் தத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய அரசை கண்டித்து சனியன்று கோபி செட்டிபாளையம் பேருந்து நிலை யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மத்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதாரக் கொள்கையாலும், வேளாண் கொள்கையாலும் விவசா யம் கட்டுப்படியாகாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவ லம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இருப்பி னும், விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழுபரிந்துரையை அமலாக்க மறுக்கி றது மோடி அரசு. இந்நிலையில் ஆசிய, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட் களை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ள நவம்பர் 4 தேதியன்று மத் திய அரசு கையெழுத்திட உள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட் டால் உணவு தானியங்கள், பால் பொருட்கள் உள்பட வெளிநாடுகளிலி ருந்து தாராளமாக இறக்குமதி செய் யப்படும். இதனால் இந்திய சந்தையை கபளீகரம் செய்வதோடு வேளாண் தொழிலையும், பால் உற்பத்தியாளர் களையும் மேலும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும் ஆபத்து உள்ளது. இத்தகைய அபாயகரமான ஒப் பந்தத்தை கண்டித்து சனியன்று கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அய்யாவு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநில செயலாளர் கோபிநாத், மாவட்டப் பொருளாளர் விஜயகுமார், மாவட்ட உதவிசெயலாளர் ஆனந்தராசு, மலை வாழ் மக்கள் சங்க தலைவர் சடை யப்பன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கிடு சாமி ஆகியோர் கோரிக்கை விளக்க வுரை ஆற்றினர். சிஐடியு சங்க நிர் வாகி கெம்புராஜ், விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விவசாயிகள் சங்க முன்னாள் தாலுகா தலைவர் நந்த குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட் டோர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.