நத்தம், ஜூலை 6- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பசியில்லா நத்தம் அறக்கட்டளையின் சார்பாக தாங்களாகவே சமைத்து உண்ணக்கூடிய ஆதரவற்றவர்கள், வாரிசு களால் கைவிடப்பட்ட முதியவர்கள் 80 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி 12 கிலோ மற்றும் பருப்பு சர்க்கரை சமையல் எண்ணெய் ஆகிய தொகுப்பு இலவசமாக வழங்கப் பட்டது. பசியில்லா நத்தம் அறக்கட்டளை நிறுவனர் மதுசூதனன் திட்டத்தை தொடங்கிவைத்தார். நிகழ்வில் நிர்வாகிகள் கண்மணி ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.