tamilnadu

img

மத்திய பட்ஜெட்டில் ஐசிடிஎஸ் திட்டத்திற்கு நிதி குறைப்பு - ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.12- மத்திய பட்ஜெட்டில் ஐசிடிஎஸ் திட்டத் திற்கு நிதிகுறைத்ததை கண்டித்து அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பாலக்கோடு ஐசிடிஎஸ் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். மத்திய அரசு  தொழிலாளர்களையும், உழைப்பாளி மக்களையும் வஞ்சிக்கக் கூடிய வகையில் பட்ஜெட்டை உருவாக்கி யுள்ளது. எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்க உள்ளது. அங்கன்வாடி, சத்துணவு,  ஆஷா போன்ற திட்டங்களுக்கான  நிதியை குறைத்துள்ளது. மேலும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாராமான நூறுநாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைத் துள்ளது. குறிப்பாக அங்கன்வாடி திட்டத் துக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு  ரூ.60 ஆயிரம் கோடிநிதியை குறைத் துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப் பால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அச்சத் தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப நிதியை உயரத் துவதற்கு பதிலாக நிதியை குறைத்துள்ளது.  இதனால் குழந்தைகள், கர்ப்பிணி பெண் களின் ஆரோக்கியம், நல்வாழ்வு கேள்வி குறியாகும். எனவே மத்திய அரசு அங்கன் வாடித் திட்டத்துக்கான நிதி குறைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே.மனோ தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம்,முன்னாள் மாநில துணைத் தலைவர் சி.அங்கம்மாள்,  மாவட்ட துணைதலைவர்கள்  முருகம்மாள் ராஜம்மாள், தெய்வானை,  மாவட்ட துணைச் செயலாளர் கவிதா,  சுமதி ஆகியோர் பேசினர்.