tamilnadu

img

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் கடன் வழங்க வங்கியாளர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 20-  மகளிர் சுய உதவிக்குழுவின ருக்கு கடன், கல்விக் கடன், தொழில் கடன், வழங்க வங்கி யாளர்களுக்கு தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் வலியு றுத்தியுள்ளர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர்களுக்கான நலத்திட் டங்கள் மற்றும் வளர்ச்சித் திட் டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணைய துணைத்தலை வர் எல்.முருகன்  தலைமையில் நடைபெற்றது.ஆய்வுக் கூட் டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி  முன்னிலை வகித்தார். இதனையடுத்து எல்.முருகன்  செய்தியாளர்களிடம் பேசுகை யில், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல் வேறு வழக்குகளின் தற் போதைய நிலைகுறித்து விசாரணை செய்யப்பட்டது. முடிவுற்ற வழக்குகளில் கூடுதல் பலன்களான வாரிசு வேலை, நிவாரண உதவி, அரசு நிலம் என பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் 3 மாத காலத்திற்குள் வழங்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலணி, லைப்ஜாக் கெட் வழங்கி அதனை பயன் படுத்தி பணி செய்ய உரிய பயிற்சி வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. துப்புரவு பணி யாளர்களுக்கு ஒப்பந்த அடிப் படையில் வழங்கப்படும் ஊதி யம் பிற மாவட்டங்களை பின் பற்றி வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  மேலும், தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு கடன், கல்விக் கடன்,  தொழில் கடன், தொழில் துவங்க கடனுதவி விரைவாக வழங்கிட வங்கியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடன் பெற்றவர்களுக்கு மானியத் தொகை விரைவாக வழங்க அறி வுரை வழங்கப்பட்டுள்ளது.  தனியார் பள்ளிகளில் பாடப் பிரிவுகள் வாரியாக இடஒதுக் கீடு முறையாக வழங்கப்பட்டுள் ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்து 3 மாதத் தில் அறிக்கை வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு குழந் தைத் திருமணம் தடுத்து நிறுத்தப் பட்டு அவர்கள் தொடர்ந்து கல்வி பயிலவும் மறுவாழ்வு அளிக்கவும், அரசின் திட்டங்கள் தகுதியுடைய நபர்களுக்கு வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரி வித்தார். முன்னதாக, நடைபெற்ற ஆய் வுக் கூட்டத்தில் தருமபுரி மாவட் டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளின் மூலமாக நலத்திட்ட உதவிகள், தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற அரசின் சலுகைகள் தருமபுரி மாவட்டத் தில்  வன்கொடுமையால் பாதிக் கப்பட்டவர்கள் பற்றிய வழக்குக ளின் தற்போதைய நிலை, வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட தீரு தவிகள் குறித்து ஆய்வு செய்தார். இதனையடுத்து தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங் குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விலை யில்லா சலவைப்பெட்டி 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை  எல்.முருகன்  வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், அரூர் வருவாய் கோட்டாட் சியர் புண்ணியக்கோட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் கோவிந்தன், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.