தருமபுரி, அக்.24- தருமபுரியில், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து வாடிக்கை யாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நேரடித் தொடர்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வியாழனன்று தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய வாடிக்கை யாளர்கள் நேரடித் தொடர்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி துவக்கி வைத்தார். இதில் 400 பயனாளிகளுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசிய தாவது, மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு சேவைகளை வங்கிகள் வாயி லாக வழங்கி வருகிறது. வேளாண்மைக் கடன், வணிகக் கடன், வாகனக் கடன், வீடு கட்டும் கடன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்க கடனுதவி, கல்விக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை அரசு மற்றும் தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்கள் நேரடித் தொடர்பு முகாமினை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி யடைகிறேன். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல் வேறு வங்கிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளது. வங்கி களில் பொதுமக்கள் வைத்துள்ள ஈட்டு வைப்புத் தொகையை வங்கிகள் மேற்கண்ட பல்வேறு வகையான கடனுதவிகளாக வழங்கி வருகிறது. பொருளாதாரத்தில் ஏற்றம் அடையவேண்டும். புதிய தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும் என்பதற்காக கடனுதவிகள் வழங்கப்படுகிறது. படித்த ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த வேலையில்லாத இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார். இம்முகாமில் இந்தியன் வங்கி பொது மேலாளர் எம்.நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் சந்தானம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரேணுகா, சேலம் மண்டல மேலாளர் எஸ்.செல்வராஜ், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.