இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது. அடுத்ததாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வியாழனன்று தொடங்குகிறது. T-20 தொடரை வென்ற இந்திய அணியைப் பழிவாங்கும் முனைப்பில் விண்டீஸ் அணியும், எங்களது வெற்றிநடை ஒருநாள் தொடரிலும் தொடரும் என்ற முழக்கத்துடன் இந்திய அணியும் என இரு அணிகளும் ஒருநாள் தொடருக்காக வரிந்துகட்டுவதால் இந்த தொடர் பரபரப்பான கட்டத்தில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடம் : கயானா - நேரம் : இரவு 7 மணி (இந்திய நேரம்)