உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானி ஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கி லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டம் நிறைவு பெற்றவுடன் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் மான்செஸ்டர் நகரில் உள்ள உணவகத்திற்குச் சென்றுள்ளனர். உணவகத்திலிருந்த ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்களை புகைப்படம் எடுக்க முயன்றனர்.
தோல்வியை பற்றி யாரும் கிண்டல் செய்தார்களோ என்னவோ தெரியவில்லை, திடீரென உணவகத்திலிருந்த ரசிகர்களுக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. வார்த்தை மோதல் கைகலப்பாக மாறும் முன்னரே மான்செஸ்டர் காவல்துறையினர் ஆப்கானிஸ்தான் வீரர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுவரை நடைபெற்ற 5 லீக் ஆட்டத்திலும் தோல்வியைச் சந்தித்து இருப்பதால் ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்வி குறித்து மான்செஸ்டர் உணவகத்தில் யாராவது கிண்டல் செய்திருக்கலாம். இதன் காரணமாகவே மோதல் உருவாகியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.