tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி மேட்டுப்பாளையம்

, ஜூன் 29- காரமடை வனப்பகுதியில் வேட்டைக்கு சென்ற இளைஞர், தான் கொண்டு சென்ற நாட்டு துப்பாக்கி தவறு தலாக வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்குட் பட்ட சுரண்டை அருகே உள்ள காப்புகாட்டு பகுதிக்குள்  சனியன்று இரவு, சுரண்டை கிராமத்தைச் சேர்ந்த சஞ்சித்  (23), குண்டூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (40), அன் சூர் கிராமத்தை சேர்ந்த பாப்பையன் (50) ஆகியோர், மான் மற்றும் முயலை வேட்டையாட உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் காட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது, மூவரும் மது அருந்திவிட்டு வேட்டைக்கு தயாராகியுள்ளனர். போதையில் வேட்டைக்காக தாங் கள் எடுத்து சென்றிருந்த நாட்டு துப்பாக்கியில் வெடி  மருந்தை அடைத்து கொண்டிருந்த போது, துப்பாக்கி  எதிர்பாராத விதமாக வெடித்ததில் சஞ்சித் படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத னால் அதிர்ச்சியடைந்த முருகேசன் மற்றும் பாப் பையன் இறந்து போன சஞ்சித்தின் உறவினர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்து விட்டு தப்பி யோடியுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் நடந்த சம்பவத்தை மறைக்கும் வித மாக சஞ்சித்தின் உடலை காட்டிலிருந்து வீட்டிற்கு எடுத்து வந்த அவரது உறவினர்கள், புதைத்து விட  முயன்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், நாட்டு துப்பாக்கியுடன் தப்பியோடிய முரு கேசன் மற்றும் பாப்பையனை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவிரி கரையோரப் பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 29- மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு நீர் திறக்கப் பட்டுள்ளதால், நாமக்கல் காவிரி கரையோரப் பகுதி களில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண் டார். கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின்  அளவு அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ள ளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ள நிலை யில், 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கன அடி வரை  உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரை யோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட் டம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான இந்திரா நகர், மணிமேகலை தெரு, கலைமகள் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், திருச்செங்கோடு வரு வாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நக ராட்சி மற்றும் காவல்துறை சார்பில் வெள்ள அபாய  எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்பொழுது  வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, ஒலிபெருக்கி மூலம்  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பள்ளி,  கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உப கரணங்களும், அரசு ஆவணங்கள், ஆதார் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்ட பொருட்களையும் பாது காப்பாக எடுத்துச்செல்ல வேண்டும், என அறிவு றுத்தினார். இதன்பின் பள்ளிபாளையத்தில் பாவடி தெரு, நாட்டார் கவுண்டன்புதூர், ஜனதா நகர் உள்ளிட்ட  பகுதிகளில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் ஏற்பட் டால் பொதுமக்கள் தங்குவதற்கும் தற்காலிக நிவா ரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, என் பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு தருமபுரி,

ஜூன் 29- பென்னாகரம் அருகே கார் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மெக் கானிக் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, சாலை  குள்ளாத்திரம்பட்டி, குறுந்தோப்பு பகுதியை சேர்ந்த வர் குணசேகரன் (42). இவர் பென்னாகரம் நீதிமன்றம் அருகே உள்ள கார் பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சனியன்று மாலை பட்டறையில் காரை கழுவும் போது, எதிர்பாராத  விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை யடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பென்னாக ரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குணசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த னர்.

ரூ.4.19 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

கோவை, ஜூன் 29- ஆன்லைன் முதலீட்டில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி  கோவையை சேர்ந்த நபரிடம் ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஆன் லைன் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்  என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். மேலும், அதில் செல்போன் எண்ணும் இருந்தது. இதையடுத்து அவரை  வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்ட அடையா ளம் தெரியாத நபர் பல்வேறு டாஸ்க்குகளை கொடுத் துள்ளார். அப்போது அதற்கான தொகையையும் வரவு  வைத்துள்ளதாக குறுஞ்செய்தியும் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த நபர் பல்வேறு தவணைகளில் ரூ.4.19 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண் டும் என்றால் கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் என  அந்த அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார். இதை யடுத்து பாதிக்கப்பட்ட நபர் கோவை குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப் படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட  விசாரணை அடிப்படையில் ஈரோடு மாவட்டம் வட்டக் காடு பகுதியை சேர்ந்த பிரதீவ் என்பவரை கைது  செய்தனர். இவர் இதே போல பலரை ஆன்லைன் மூலம்  மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிட மிருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், 1 பாஸ்புக்  மற்றும் 3 ஏ.டி.எம் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

கோவை, ஜூன் 29- ஊஞ்சப்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வளர்ப்பு நாயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட னர். கோவை மாவட்டம், ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலுவின் வீட்டில் வளர்க் கப்பட்டு வந்த நாய் ஒன்று, 100 அடி ஆழ கிணற்றில் இரண்டு  நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இந்நிலையில், ஞாயி றன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து  நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த போது, நாய் உயிருடன் கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக கருமத்தம்பட்டி தீயணைப்பு நிலை யத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ  இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக் குள் இறங்கி, நாயை உயிருடன் மீட்டனர்.

யானை உலா உதகை,

ஜூன் 29- மேட்டுப்பாளையம், சத் தியமங்கலம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் வறட்சி நில வும் காலங்களில், உணவு மற் றும் தண்ணீர் தேடி யானை கள் மலை மாவட்டத்திலி ருந்து வருவது வழக்கம். இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, பரளியார் மற்றும் கேஎன்ஆர் பகுதி யில் கடந்த ஒரு மாதத்திற்கு  மேல் ஒற்றை யானை நட மாட்டம் காணப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும், என குன்னூர் வனத்துறையினர் அறிவு றுத்தி வருகின்றனர்.