10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை ஆனைமலை – பழனி சாலையில் மறியல்'
உடுமலை, ஜூன் 11- உடுமலை ஒன்றியம் பார்த்தசாரதிபுரம் கிராமத் திற்கு கடந்த பத்து நாட்க ளாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண் டித்து புதனன்று ஆனை மலை – பழனி சாலையில் பொது மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். உடுமலை ஊராட்சி ஒன் றியம் எலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பார்த் தசாரதிபுரம் கிராமத்தில் 200 க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கு மடத்துக்குளம் கூட்டு குடிநீர் திட் ்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சில ஆழ்குழாய்களில் இருந்தும், தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொது மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு திருமூர்த்திமலை குடிநீர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்க ளின் இதர பயன்பாட்டிற்கு ஆழ்குழாய்க ளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேல் திருமூர்த்திமலை குடிநீர் வரவில்லை. ஆழ்கு ழாய் தண்ணீரும் வருவது இல்லை. இப்பி ரச்சனை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற னர். இது குறித்து அப்பகுதி அரசியல் கட்சியி னர் கூறுகையில், பார்த்தசாரதிபுரம் மட்டு மின்றி உடுமலை ஒன்றியம் முழுவதும் இது போல் குடிநீர் பிரச்சனை உள்ளது. இப்பிரச்ச னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து தொடர்பு டைய அதிகாரிகள், வியாழக்கிழமை (இன்று) குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்த நிலை யில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந் தது.