லண்டன், ஜூன் 17- டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெ னவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்பு க்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள இந்த மருந்து கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண் ணிக்கையைக் குறைக்கவல்லது என்பது தற்போது தெரியவந்துள்ளது.மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைர சுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறது. வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது என்றும், ஆக்சிஜன் செலுத்தப்படும் நிலை யில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு மடங்கு குறைக்கிறது என்றும் இந்த ஆய்வுக் குழு கண்டு பிடித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்று இந்த ஆய்வுக்குழு கூறியுள்ளது. கொரோ னா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுக ளுக்கு இந்த மருந்து பெரிய அளவில் உதவி யாக இருக்கும். கொரோனா தொற்று ஏற்படும் ஒவ்வொரு 20 பேரிலும் 19 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படாமலே குணமாகிவிடுகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறவர் களில் பெரும்பாலானவர்களும் குணமடை கின்றனர். வெகு சிலருக்கே ஆக்சிஜன் செலுத்துவதும், வெண்டிலேட்டர் உதவியும் தேவையாக இருக்கிறது. அத்தகைய நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தாசோன் உதவி கரமாக உள்ளது.
இந்த டெக்ஸாமெத்தாசோன் ஒன்றும் புதிய மருந்தல்ல. அது ஏற்கெனவே முடக்கு வாதம், ஆஸ்துமா உள்ளிட்ட பல நிலை களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துதான். வெண்டிலேட்டரில் வைக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளில் பாதிப்பேர் இறந்துவிடுகின்றனர். இந்நிலையில், இத்த கைய நோயாளிகளின் இறப்பு விகிதத்தை இந்த மருந்து மூன்றில் ஒரு பங்கு குறைக்கும் என்பது பெரிய விஷயம்.மிக மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ரத்தக் குழாய் மூலம் இந்த மருந்தை ஏற்றலாம். மற்றவர்களுக்கு மாத்திரையாகத் தரலாம். இது தவிர, கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சையில் உதவுவதாக கண்டறியப் பட்டுள்ள ஒரே மருந்து ரெம்டிசிவிர் என்னும் வைரஸ் கொல்லி மருந்துதான். இது, நோயாளிகள் குணமடைவதற்கான காலத்தை 15 நாள்களில் இருந்து 11 நாள்க ளாக குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ரெம்டிசிவிர் உயிரிழப்புகளைக் குறைப்பதாக காட்டும் அளவுக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. அது தவிர, ரெம்டி சிவிர் புதிய மருந்து. அதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.