tamilnadu

img

நெல்லையில் வாலிபர் சங்க தலைவர் படுகொலை

நாமக்கல், ஜூன் 14- நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல், சேலத் தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் நெல்லை மாவட்ட பொருளா ளராக செயலாற்றி வந்த அசோக் என்பவர் புதனன்று இரவு சாதிய ஆதிக்க சக்தியினரால் வெட்டி கொடூர மாகப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ள இந்தப் படுகொலைக்குக் கார ணமான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறையினர் அலட் சியம் காட்டி வருகின்றனர். இந் நிலையில் அசோக் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடன டியாகக் கைது செய்ய வேண்டும். சாதி ஆதிக்கவாதிகளின் வெறிச்செய லுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும் என வலியுறுத்தி தமிழகம் முழு வதும் கண்டன இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத் தத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ந.வேலுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தரம், எஸ்.செல்வம், கே.எஸ்.வெங்கடாசலம், ஆர்.ரமேஷ் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பி.மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.கே.பிரபாகரன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், மாவட்ட பொரு ளாளர் வீ.மணிகண்டன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.ரவி, மாவட்ட குழு உறுப்பினர் நந்தினி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங் கேற்று ஆவேச முழக்கங்களை எழுப் பினர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் இளைஞர் சங்க மாநில செயலாளர் என்.பிரவின்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்க டேஷ், வடக்கு மாநகர செயலாளர் ஆர்.வி.கதிர்வேல், மாநகர தலைவர் சதீஸ்குமார், அம்ஜத்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்று சாதிய ஆதிக்க சக்தியி னரின் வெறிச்செயல் மற்றும் அதற்கு துணைபோகும் காவல்துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.