tamilnadu

சேலம் மற்றும் கோவை முக்கிய செய்திகள்

ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

சேலம்,டிச.3- வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி வருவதை மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் செவ்வாயன்று நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட் டம், வலசக்கல்பட்டி ஏரியானது வட கிழக்கு பருவமழையின் காரணமாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், இந்த ஏரி யானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங் களாக பச்சமலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரியானது நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது.  இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது 6 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள சுவேதா நதியில் கலக்கிறது. இந்த ஏரியின் வாயிலாக பாசனத்தின் மூலம் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது.  இந்நிலையில்  பச்சமலை பகுதிகளில் அதிக மழைப் பெய்ததன் காரணமாக அதிக பட்சமாக இந்த ஏரியில் இருந்து 12 ஆயி ரம்  கனஅடி நீர் வெளியேறியது. தற் போது இந்த ஏரியிலிருந்து 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகின்றது. ஏரியி லிருந்து அதிகபடியான உபரி நீர் வெளி யேறி வருவதால் மழைநீர் வழிந்து வெளி யேறும் கால்வாய்க்கு அருகில் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப் பாக இருக்குமாறும், தங்களது கால்நடை களை பாதுகாப்பான இடங்களில் வைத் துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.  மேலும், பொதுமக்கள் யாரும் ஏரி மற்றும் நீர் வழிந்தோடும் வாய்க்கால் களில் இறங்கவோ, கால்நடைகளை குளிப் ப்பாட்டவோ கூடாது என வருவாய்த்துறை யினர், வளர்ச்சித்துறைனர், பொதுப்பணித் துறையினர் உள்ளிட்ட துறை அலுவ லர்கள் மூலம் பொது மக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகள், மழைநீர் வழிந்து வெளி யேறும் வாய்க்கால் உள்ளிட்ட பகுதி களை தூர்வாரி வழிந்தோடும் நீர் தடை யில்லாமல் வெளியேறவும், மதகுகள் சீர் செய்து, பொது மக்களுக்கு இடையூறு இல் லாத வண்ணம் நடவடிக்கைகள் மேற் கொள்ள பொதுப் பணித்துறை நீர்வள ஆதா ரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் உத்தரவிட்டார். முன்னதாக, இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபிநாத் மற் றும் பொதுப் பணித்துறை (சரபங்கா வடி நிலக் கோட்டம்) செயற்பொறியாளர் வ.கௌதமன், கெங்கவல்லி வருவாய் வட் டாட்சியர் சு.சிவக்கொழுந்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிறுமி பலாத்கார வழக்கில் ஒருவர் சரண்

கோவை, டிச.3–  கோவையில் 17 வயது சிறுமியை 6  பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் முக்கிய குற்றவாளியென தேடப் பட்டு வந்தவர் கோவை மகளிர் நீதி மன்றத்தில் செவ்வாயன்று சரணடைந்தார். கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 26ம் தேதி பிறந்த நாளை  கொண்டாட தனது  நண்பருடன் சென்றுள்ளார். அப்போது, அவரின் நண்பரை தாக்கி அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தரப்பில் கடந்த 28ம் தேதி ஆர்.எஸ்,புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன்(28) மற்றும் நாராயண  மூர்த்தி(30) ஆகியோரை காவல்துறையினர் செய்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியென தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவர் செவ்வாயன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரண டைந்தார்.