சார் ஆட்சியரிடம் மனு
தாராபுரம், நவ. 21 - தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமையும் இடத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தாராபுரம் சார் ஆட்சியரிடம் விவசாய சங்கங்க ளின் கூட்டு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. உயர்மின் கோபுரங்களுக்கு எதி ரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப் பாளர் மு.ஈசன் தலைமையில் தாரா புரம் சார் ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இம் மனுவில் கூறியிருப்பதாவது, தாரா புரம் பகுதி உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் பவர்கிரிட் மற் றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரங்களுக்கு நிலத் தின் மதிப்பிழப்பிற்கு குறைந்தபட்ச தொகை ரூ.50 ஆயிரம் என நிர்ண யம் செய்துள்ளது. ஆனால் மஹாராஷ் டிராவில் குறைந்தபட்சம் ரூ.9 லட் சத்து 50 ஆயிரம், கர்நாடகாவில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், உத்தர பிரதேசத் தில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம், கம்பி செல்லும் இடத்திற்கு அதிகபட்ச மாக ரூ.4 லட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே மேற்கண்ட மாநிலங்களை விட நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ள தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமையும் இடத்திற்கு ரூ.20 லட்சமும், கம்பி செல்லும் இடத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரு.10 லட்சமும் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு கிடைத்திட ஆவண செய்யசெய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இம்மனுவினை அளிக்கையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, தற்சார்பு விவ சாயிகள் சங்க தலைவர் கி.வெ.பொன் னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர். குமார் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகி சிவக்குமார், சிபிஎம் தாரா புரம் தாலுகா செயலாளர் என்.கனக ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.