tamilnadu

img

கோவையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை அமைச்சர் ஆய்வு

கோவை, ஆக.10–  தொடர் கனமழையால் கோவை யில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் வெள் ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனியன்று ஆய்வு மேற் கொண்டார்.   கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த மழையின் காரண மாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிங் காநல்லூர் - வெள்ளலூர் இடையி லான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் கிராம தரைப்பாலம் ஆகியவை சேதமடைந் தன. இந்நிலையில், சூலூர் அருகே உள்ள ராவத்தூர் கிராமத்தில் கன மழையால் சேதமடைந்த நொய்யல் ஆற்றின் பாலத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். இந்த ஆய் வின் போது, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, சூலூர் சட்டமன்ற உறுப் பினர் கந்தசாமி, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.  இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில்,  நீலகிரியில் கடுமையான மழை பொழிவு ஏற்பட் டுள்ளது. பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு நிவார ணப் பணிகளை செய்து வருகின்ற னர். கோவையிலும் மழை வரு வதற்கு முன்பே முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. கோவையில் 275.47 மி. மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், இங்கு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டு உள்ளது. மேலும், மழையினால் கோவை மக்களுக்கு மகிழ்ச்சிதான். 40 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு நொய் யல் ஆற்றில் அதிக வெள்ளம் ஏற்பட் டுள்ளது. எல்லா வாய்க்கால்களும், குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் குளங்களில் அதிகமான தண்ணீர் நிரம்பி வருகிறது.  நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததாலும், குளங்களுக்கு செல்லும் பாதை சிறியது என்பதாலும் குளங்கள் மெதுவாக நிரம்பி வருகின்றன. செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பில்லூர் அணை 97.5 அடி நீர்மட்டம் இருக்கின்றது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்து இருக்கின்றது. கோவை யில் உள்ள அனைத்து தடுப்பணை களும் நிறைந்துள்ளது.  வெள்ள  பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட வர்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் கரு தினாலே, உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும். கோவை மாவட்டத்தில் 1,335 பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். 72 வீடுகள் பாதி சேத மடைந்துள்ளன. 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கோவையில் உள்ள 21 குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ராவத்தூரில் சேதமடைந் துள்ள நொய்யல் ஆற்றுப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக் கப்படும். சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையிலான பாலம் குறித்து அதி காரிகளுடன் ஆய்வு செய்தபின் நட வடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடப்பதால் கோவையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்பது தவறு. கோவையில் குளக்கரைகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு இருந்த 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.