சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம், நவ.22- மேட்டூர் கெம்பிளாஸ்ட் நிறுவ னத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் அதன் சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து சிஐடியு சார்பில் மேட்டூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள சன் மார்க் குரூப்ஸ் கெம்பிளாஸ்ட் நிறுவனம் நான்கு ஆலைகளை நடத்தி வரு கிறது. இந்த நிறுவனம் தொழிலாளர் நலச்சட்டங்கள் எதையும் அமல் படுத்துவதில்லை. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையின் அறிவு றுத்தலையும் நிர்வாகம் செவி மடுக்க மறுத்து வருகிறது. இது குறித்து கேள்வி எழுப்பும் தொழி லாளர்களை பணியிடை நீக்கம் செய்வது, பணிநீக்கம் செய்வது போன்ற பழிவாங்கும் நடவ டிக்கையை தொழிற்சாலை நிர் வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேபோல், தொழிற் சங்கம் அமைத்ததற்காக 22 தொழி லாளர்களையும் எந்தவித விசா ரணையுமின்றி நிர்வாகம் வேலை நீக்கம் செய்துள்ளது. மேலும், நிரந்தர தன்மையிலிருந்த தொழி லாளர்களை கட்டாய பணி விடு விப்பு செய்து, ஒப்பந்த தொழி லாளர்கள் என்ற பெயரில் நவீன கொத்தடிமை முறையை அமல் படுத்தி வருவதாக தொழிலாளர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் புதிதாக துவங்கப்பட்ட கெம் பிளாஸ்ட் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற நச்சு வாயு கசிந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இது குறித்து நியாயம் கேட்க திரண்ட 160க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது ஆலை நிர்வாகத்திற்கு ஆதர வாக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிந்துள்ளனர். இதன்ஒரு பகுதியாக சிஐடியு சங்கத்தின் துணை செயலாளர் முடியரசன் என்பவர் மீது பொய் வழக்கு பதிந்து வெள்ளியன்று அராஜகமான முறை யில் கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர். இதனை கண்டித்தும், மேட்டூர் கெம்பிளாஸ்ட் நிறுவனம் சட்ட வரம்புக்குள் செயல்பட வேண்டும். இதனை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் வி.இளங்கோ தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், மாவட்ட உதவி தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு கட்டுமான சங்க தலைவர் சி.கருப்பண்ணன், கோனூர் மேற்கு விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.சத்தியமூர்த்தி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டூர் கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் தொழிலாளர்கள் சங்கம், மெட்கம் சிலிக்கான் எம்ப்ளாயீஸ் யூனியன், கோனூர் மேற்கு விவசாயிகள் சங்கத்தினர், தொழிலாளர்கள் திர ளானோர் கலந்து கொண்டனர்.