tamilnadu

img

ஆணவக்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தருமபுரி, ஆக.6- தருமபுரியில் ஆணவக் கொலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி   மாவட்ட காவல் துறை சார்பில் செவ்வா யன்று நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு  துவங்கிய ஆணவப் படுகொலை தடுப்பு  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் துவக்கி வைத்தார். சமூக நீதி பரிவு காவல் துணை  கண்காணிப்பாளர் அசோக்குமார், தரும புரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ் குமார்,காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) பாரதிதாசன் மற்றும் காவல்  ஆய்வாளர்கள், துணைகாவல் ஆய்வாளர் கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் விவேகானந்த நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் ரீ விஜய்வித்யாலய கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்றனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு துவங்கிய பேரணி நான்கு வழிச்சாலையில் முடி வடைந்தது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஆணவக்கொலை தடுப்பது தொடர் பாக, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர், மாவட்டசமூக நல அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலு வலர் அடங்கிய சிறப்புக்குழு ஏற்படுத்தி யுள்ளது. கலப்பு திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது, தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப் பிரிவுசெயல்படும். மேலும் புகாரை தெரி விக்க காவல் துணை கண்காணிப்பாளர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு  9444288325, 04342-230989, 9498101055 ஆகிய செல் மற்றும் தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என  காவல்துறை சார்பில் அறிவிப்பும் வெளியி டப்பட்டுள்ளது.