tamilnadu

img

நீலகிரியில் குடிநீர் ஏடிஎம் மையங்கள் தொடக்கம்

உதகை, செப்.2- நீலகிரியில் குடிநீர் ஏடிஎம்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.  சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ் டிக் பொருட்களைத் தடை செய்யும் வகை யில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, பேரூராட்சிகள்,  கிராம ஊராட்சிகள் என பல்வேறு அமைப்புகளின் பங்களிப்புடன் மாவட்டத்தில் 140 மையங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, முதல்கட்டமாக 70 இடங்களில் குடிநீர்  ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் மையத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, உதகை கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.