tamilnadu

img

ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும்

சேலத்தில் வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பேட்டி

சேலம், செப்.22- சேலத்தில் மளிகை சில்லறை வியா பாரிகள் சங்கத்தின் 47ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கல்வி பரிச ளிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும்  முப்பெரும் விழாஞாயிறன்று தமிழ்ச்  சங்கம் கட்டிட வளாகத்தில் வாக நடைபெற்றது. இதில் பங்கேற்க சேலம் வந்திருந்த  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறுகையில், “ புளிக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்கிறது. வறுகடலைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உள்ள குழப்பமான வரி விதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து  வலியுறுத்த இருக்கிறோம். ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும். சட்டத் துறை விதிகளை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.  உள்நாட்டு வணிகத்தை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய நிதியமைச் சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கவரில் தான் விற்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு பொருட்களுக்கு பிளாஸ்டிக் கவரில் இருந்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராத விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபரில்  சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் பெப்சி, கோக் உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை  விதிக்க வலியுறுத்தி வருகிறோம். உள்நாட்டு குளிர்பான நிறுவனங் களை  வளர்க்க அரசு உதவ வேண்டும். அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன் லைன் வணிக நிறுவனங்கள் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டு வரு கின்றன. இந்த நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் ஒரு கிலோ பருப்பு  ஒரு ரூபாய்க்கும், ஒரு கிலோ சர்க்கரை  ஒரு ரூபாய்க்கும் விற்பது மோசடி யாகும், இதனை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென என கோரிக்கை  விடுத் துள்ளோம் என தெரிவித்தார்.  சேலத்தில் மேம்பால பணி களால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரி களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மேம்பால பணிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் தமிழ் நாடு வணிகர்களின் ஆதரவு யாருக்கு  என்பதை ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என  செய்தியாளர்களிடம் அவர் தெரிவித் தார்.