தருமபுரி, பிப்.14- தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட் டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் வெள்ளி யன்று வெளியிட்டார். கடந்த 23.12.2019 அன்று வெளி யிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டி யலை அடிப்படையாகக் கொண்டு, 01.01.2020 அன்றைய தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி யடைந்தோர் மற்றும் விடுபட்டவர் களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டன. அதன் மீது தணிக்கை மற்றும் விசா ரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டி யலில் சேர்த்தும், ஏற்கனவே வாக் காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்தோர், குடிபெயர்ந்தோர் இரு முறை பதிவு ஆகிய தகுதியற்ற இனங் களில் உள்ளவர்களை பெயர் நீக்கம் செய்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டி யலில் உள்ளவர்களின் பதிவுகளில் திருத்தம் செய்யக் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரணை செய்து திருத்தம் செய்யப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியலினை பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்ட மன்றத் தொகுதியில் உள்ள வாக் காளர்களின் எண்ணிக்கை கீழ்கண்ட வாறு உள்ளது. பாலக்கோடு சட்ட மன்ற தொகுதியில் ஆண்கள் 1,16,620 பேரும், பெண்கள் 1,12,847, இதரர் 14 பேர் என மொத்தம் 2,29,481 வாக் காளர்கள் உள்ளனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி யில் ஆண்கள் 1,24,516 பேரும், பெண்கள் 1,15,473 பேரும், இதரர் 8 பேர் என மொத்தம் 2,39,997 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,32,562 பேரும், பெண்கள் 1,29,487 பேரும், மற்றவர் 106 என மொத்தம் 2,62,155 வாக்காளர்கள் உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஆண்கள் 1,30,495 பேரும், பெண்கள் 1,28,788 பேரும், இதரர் 6 பேர் என மொத்தம் 2,59,289 வாக்காளர்கள் உள்ளனர். அரூர் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,21,867 பேரும், பெண்கள் 1,20,257 பேரும், இதரர் 7 பேர் என மொத்தம் 2,42,131வாக்காளர்கள் உள்ளனர். 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 6,26,060 பேரும், பெண்கள் 6,06,852 பேரும், இதரர் 141பேர் என மொத்தம் 12,33,053 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி மாவட்ட இறுதி வாக் காளர் பட்டியல்-2020 அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வரு வாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக் கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப், வருவாய் கோட் டாட்சியர் தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாஇராணி, வட்டாட்சியர் தேர்தல் பாலமுருகன், வட்டாட்சி யர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் வெளியிட்டார். சேலம் மாவட்டத்தில் வெளியிடப் பட்டுள்ள 11 தொகுதிகளுக்காக வாக் காளர் பட்டியலில் ஆண்கள் 14,83,369 பேரும், பெண்கள் 14,85,133 பேரும், இதரர் 171 பேரும் என மொத்தம் 29,68,673 பேர் வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநக ராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்கள்) தியாகராஜன், வருவாய் வட்டாட்சியர் (தேர்தல்கள்) வி.திருமாவளவன் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் இறுதி வாக் காளர் பட்டியலை வெள்ளியன்று வெளியிட்டார். நாமக்கல் மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 6,95,840 பேரும், பெண்கள் 7,29,469 பேரும், இதரர் 138 பேர் என மொத்தம் 14,25,447 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக் குமார், திருச்செங்கோடு கோட்டாட் சியர் ப.மணிராஜ், மாவட்ட ஆட்சி யரின் நேர்முத உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ் ராஜ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) பெ.பிரேமலதா, தேர்தல் வட்டாட்சியர் பா.சுப்பிர மணியம், நாமக்கல் வட்டாட்சியர் பச்சைமுத்து உள்ளிட்ட அரசியர் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.