மூன்றாம் பாலினருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
தருமபுரி, பிப். 7- மூன்றாம் பாலினருக்கான முன்மாதிரி விருது 2020-ஆண்டு முதல் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன் னேறியுள்ளனர். அவ்வாறு முன்னேறி இச்சமுதாயத் தில் சமநிலை அடைந்துள்ளதே அவர்கள் படைத்த சாதனையாகும். அங்கனம் சாதனை படைத்த மூன்றாம்பாலினரை கௌரவிக்கும் வகையிலும், மற்ற மூன்றாம் பாலினர்களை ஊக்குவிக்கும் வகையி லும் செயல்படும் மூன்றாம் பாலினர்களுக்கு வழங்கப் பட உள்ளது. இவ்விருதுக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மூன்றாம் பாலினர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 மூன்றாம் பாலினருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது உள்ளிட்ட விதி முறைகளின் கீழ் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்ன படுகின்றன. இந்த விருதிற்கு தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்.10ஆம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் குளத்திற்குள்ளேயே நிதியை கொட்டுவதாக குற்றச்சாட்டு
கோவை. பிப். 7 - கோவை மாநகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் குளக் கரைகளை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிகளை மாந கராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செயல்படுத்தி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல் வேறு திட்டப்பணிகள் ரூ.998 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட் டது. குறிப்பாக, 24 மணி நேரம் குடி நீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப் பேட்டை இடமாற்றம், வெள்ள லூர் ஒருங்கிணைந்த பஸ் நிலை யம், வ.உ.சி பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங் கள் அறிவிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி நிர்வாகம் குளக்க ரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பில் மட்டும் ஆர் வம் காட்டி வருகிறது. நீர்நிலை சீர மைப்பு பணி என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ. 62 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. கரைகளை அழகாக்க, பூங்கா அமைக்க, வாக்கிங், ஸ்கேட் டிங் தளம் அமைப்பதில் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் அதிக நிதியை செலவிட்டு வருகிறது. இக் குளம், 4.7 கி.மீ சுற்று பரப்பள வில் இருக்கிறது. குளத்தில் 12 மீட்டர் ஆழம் தூர் வாரி சீரமைக்க வேண்டியுள்ளது. உக்கடம் பெரிய குளத்தை தொடர்ந்து வாலாங்கு ளத்தின் கரைகளும் ரூ.40 கோடிக்கு அதிகமான தொகையில் சீரமைக்கும் பணி நடந்து வருகி றது. முதல் கட்டமாக ரூ. 23 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் ரூ.31.47 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த குளங்களை தொடர்ந்து நர சாம்பதி, கொலராம்பதி, செல்வாம் பதி, சிங்காநல்லூர், குறிச்சி குளங் களை சீரமைக்க சுமார் 200 கோடி ரூபாயை ஸ்மார்ட்சிட்டி திட்டத் தில் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மாநகரில், குடிநீர் விநியோகம், மின் விளக்கு, தார்ச் சாலை, வாகனம் நிறுத்த கட்ட மைப்பு, பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு என எந்த திட்டப்பணிகளிலும் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாமல், குளக்கரையை சீரமைப்பதிலேயே நிதியை வீணாக்கி வருகிறது என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கள் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் எந்த ஒரு பயனும் இல்லை. குளக்கரைகளை அழகுப் படுத்துவதற்கு செலவிடப்படும் நிதியை குறைத்து மாநகர் பகுதி களில் அதிக இடங்களில் கழிவறை களை கட்டினால் பயனுள்ளதாக இருக்கும். பல இடங்களில் சாலை வசதி என்பதே இல்லை, கொசுக் களை கட்டுப்படுத்த மாநகராட்சி யால் முடியவில்லை. அப்படியி ருக்க கோடிக்கணக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எதற்கு? என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து கோவை மாநக ராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஆர். எஸ்.புரம் டி.பி ரோட்டில் 11,600 சதுர மீட்டர் பரப்பில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையி லான மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.74 கோடி செலவில் எல்இடி பல்பு திட்டம் செயலாக்கப்பட்டு வரு கிறது. இதுவரை சுமார் 40 ஆயிரம் தெரு விளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட்டுள் ளன. வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. இதர திட்டங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதே சமயம் மாநகரில் அடிப்படை வசதிகளும் மேம்பாடு செய்யப்பட்டு தான் வரு கிறது என தெரிவித்தனர்.
பான் மசாலா விற்ற 53 கடைகள் மீது வழக்கு
தருமபுரி, பிப். 7- தருமபுரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 13 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, நகர காவல் துறை யினரிடம் நடத்திய சோத னையில் சிக்கியது. இதையடுத்து தருமபுரி காவல் கண்காணிப்பாளர் ராஜன் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், தருமபுரி சரகத்தில் 6 வழக்கு, அரூரில் 18 வழக்கு, பாலக்கோட்டில் 17 வழக்கு என மொத்தம் 53 வழக்குகள் பான் மசாலா விற்பனை செய்தற்காக பதிவு செய்த னர்.
சேலத்தில் இன்று மதுபானக் கடைகள் மூடல்
சேலம், பிப். 8- சேலம் மாவட்டத்தில் இன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட் டத்தில் பிப்.8ஆம் தேதியன்று மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை, நாள்.29.10.2012-ன்படி பிப்.5ஆம் தேதி யன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மது பானக்கடைகள் மூடப்படுகிறது. எனவே, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற மதுபானக் கடை கள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.