ஏற்காடு, நவ.22- ஏற்காட்டில், ரோட்டரி கிளப் சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஒழிப்பு குறித்த விழிப்பு ணர்வு பேரணி வெள்ளி யன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற் காடு ரோட்டரி கிளப் சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஒருங்கி ணைப்பாளர் சிஜூ தலைமையில், மாண்ட் போர்ட் பள்ளியில் துவங்கிய இப் பேரணியை, மாண்ட்போர்ட் பள்ளியின் தலைமையாசிரியர் டொமினிக் சேவியோ மற்றும் தூய இருதய பள்ளி தலைமை யாசிரியர் நான்சி ஆகியோர் கொடிய சைத்து துவக்கி வைத்தனர். பேரணி காந்தி பூங்கா, கோவில் மேடு, புனித ஜோசப் பள்ளி, காவல் நிலையம், லாங்கில் பேட்டை, கடைவீதி, பேருந்து நிலையம், ஒண்டிக்கடை, அன்னா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டை சுற்றியுள்ள பகுதி களில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பாதீர். காய்ச்சல் அறிகுறி இருப்பின் சுய மருத்துவம் வேண்டாம், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தி சென்றனர். இதையடுத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் கலந்து கொண்டு மாணவர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்கள் கொசு ஒழிப்பு பணியின் போதும், சுகாதார பணிகள் மேற்கொள்ளும்போதும் தற்காப்பு வழிமுறைகள் குறித்து விளக்கி னார். மேலும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.32 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உப கரணங்களை ரோட்டரி கிளப் மூலம் வழங் கப்பட்டது.