கோவை, ஜூலை 25- நலவாரிய பணப்பலன்களை வழங்கக் கோரி ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. கட்டுமான சங்கத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி கூட்டம் வியாழனன்று சிங்காநல்லூர் எச்எம்எஸ் தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. எல்பிஎப் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டத் திற்கு தலைமை தாங்கினார். இதில் ஏ பி டி தொழிற்சங்கத் தின் நிர்வாகி முருகேசன், எச்எம்எஸ் மனோகரன் சிஐடியு கட்டுமான சங்கத்தின் செயலாளர் பழனிச்சாமி, ஏஐடியுசி தங்கராசு, ஐஎன்டியுசி சிரஞ்சீவி கண்ணன் ஆகியோர் பங் கேற்றனர். முன்னதாக இக்கூட்டத்தில் நலவாரிய அலுவலகத்தில் பணப்பயண்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உட னடியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற திங்களன்று (ஜூலை 29) நல வாரிய அலுவலகத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் மனு அளிப்பது. நலவாரிய பணப் பயன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி மனு அளிப்பது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம்தேதி அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் தொழிலாளர் களை திரட்டி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.