tamilnadu

img

ஒகேனக்கலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்

பென்னாகரம், மார்ச் 20- ஒகேனக்கலில் கொரோனா வைரஸ்  குறித்த விழிப்புணர்வு  பிரச்சாரம் வெள்ளியன்று  நடைபெற்றது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இச்சூழலில்  ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலத்தில் பென்னா கரம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப் புணர்வு பிரசாரம் நடை பெற்றது. இதில், பென்னா கரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணி வண்ணன்  மற்றும் மருத்துவ அலுவலர்கள், ஒன்றிய துணைத் தலைவர், ஒன்றிய கவுன் சிலர், ஊராட்சி மன்ற தலைவர், மருத்துவ ஊழியர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஒகேனக்கல் சோதனை சாவடி, ஒகேனக்கல் பேருந்து நிலையம், ஒகேனக்கல் அரசு மருத்துவமனை, வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி  தெளிக்கப்பட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.