tamilnadu

img

ஏழை, எளிய மக்களுக்காக களப்பணியாற்றியவர் தோழர் எஸ்.பி.சின்னராசு

படத்திறப்பு விழாவில் பெ.சண்முகம் புகழாரம்

தருமபுரி, நவ.12- ஏழை, எளிய மக்களுக்காக களப் பணியாற்றியவர் தோழர் எஸ்.பி. சின்னராசு  என அவரது படத்திறப்பு விழாவில் பெ.சண்முகம் புகழாரம் சூட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்டக்குழு உறுப்பி னரான மறைந்த தோழர் எஸ்.பி. சின்னராசுவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் அரூர் அருகே  சங்கிலிவாடி கிராமத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.மல்லிகா தலைமை வகித்தார். இதில் தோழர் எஸ்.பி.சின்னராசு படத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது,  தோழர் எஸ்.பி.சின்னராசு இளம்  வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் தன்னை  முழுமையாக ஒப்படைத்து கொண் டார். இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்,  விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப் பினர், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். சுமார் 40 ஆண்டுகாலம் சொந்த நலனைவிட கட்சி நலனுக்காக கடைசி வரை பணி யாற்றியவர். மேலும் விவசாயிகள், விவசாய  தொழிலாளர்கள், ஏழை, எளிய  மக்களின் ஜனநாயக உரிமைகளுக் காக தொடர்ந்து குரல்கொடுத்தவர்.  வாச்சாத்தி மலைவாழ் மக்கள்,  வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க  களத்தில் நின்று சமரசமின்றி போராட் டத்தில் ஈடுபட்டவர்.  அரூர் வட் டத்தில் நடைபெறும் போராட்டங் களில் இவரின் பங்கு அளப்பரியாதது   என பெ.சண்முகம் புகழாரம் சூட்டி னார். இந்நிகழ்வில் மலைவாழ் மக்கள்  சங்க மாநிலச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன்,  தருமபுரி மாவட்டச்  செயலாளர் ஏ.குமார், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம் பரிதி, எம்.மாரிமுத்து, எம்.முத்து,  இரா.சிசுபாலன், கே.என். மல்லையன், ஒன்றிய செயலாளர்கள்  மொரப்பூர் கே.தங்கராசு,பாப்பி ரெட்டிபட்டி சி.வஞ்சி, மாவட்டக் குழு  உறுப்பினர்கள் டி.சேகர்,பி.வி.மாது, வேலாயுதம் மற்றும் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வீர பத்திரன், எஸ்.கே.கோவிந்தன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தோழர் எஸ்.பி. சின்னராசு குடும்ப நிதியாக ரூ.75 ஆயிரத்தை மாநில செயற்குழு உறுப் பினர் பி.சண்முகம் அவரது குடும்பத் தாரிடம் வழங்கினார்.