tamilnadu

img

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்க உடுமலையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

உடுமலை, டிச. 20- நகராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும் துப்புரவு தொழி லாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உடு மலையில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் துறையில் பல ஆண் டுகளாக வேலை செய்யும் துப்புரவு மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசின் 11.10.2017 அன்றைய அரசாணை 2(D) 62 ன் படி ஊதியம் நிர்யணம் செய்து வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி துப் புரவு தொழிலாளர்களுக்கு ரூ.420ம், ஓட்டுநர்களுக்கு ரூ.525ம் தினசரி ஊதியமாக வழங்க வேண்டும். உள் ளாட்சியில் வேலை செய்யும் தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎப் தொகையினை, நிர்வாகத்தின் பங் குத் தொகையோடு தொழிலாளர் கணக்கில் செலுத்தி அதற்கான ஆவ ணங்களை வழங்க வேண்டும். துப் புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்ய வேண்டும். அனைத்து தொழி லாளர்களுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாய மருத்துவ பரி சோதனை செய்ய வேண்டும்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகள், 16 பேரூராட்சி களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி புதனன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன் பாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கே.தண்ட பாணி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணை செயலாளர் கே.ரங்க ராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்டத் துணை செயலாளர் எஸ்.ஜெகதீசன், பேரூராட்சிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ப.பாலுசாமி மற்றும் உடுமலை நக ராட்சி கிளையில் எம்.சுப்புலட்சுமி உள் ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.