கோவை, பிப். 19 – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்தும், மக்களுக்கு எவ்வித பயனும் அளிக்காத கரூர் ஆறு வழிச்சாலை திட் டத்தை கைவிட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் புதனன்று வலியுறுத்தினார். கரூர் முதல் கோவை வரையிலான ஆறு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த அரசின் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட உள்ளது. இதில் சிறு, குறு விவசாயி களின் நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகும். இதற்காக ரூ.3 ஆயி ரம் கோடி செலவு செய்யப்படுகிறது. இவ் வளவு பாதிப்பிற்கு பிறகும் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே குறையும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட் டத்தை கைவிட்டு ஏற்கனவே உள்ள புற வழிச்சாலையை அகலப்படுத்தலாம். அல்லது கரடிவாவி முதல் ஒத்தக்கால் மண்ட பம் வழியாக செல்லும் சாலையை அகலப் படுத்தலாம். இச்சாலையை அகலப்படுத்த ஏற்கனவே அரசின் சார்பில் நிலம் கைய கப்படுத்தப்பட்டுள்ளது. இதனையெல் லாம் விடுத்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி, மக்களுக்கும் எவ்வித பயனும் அளிக்காத இத்திட்டத்தை நிறை வேற்ற வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை என்பதே ஒட்டுமொத்த விவசாயிக ளின் கருத்தாக உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து கொங்கு மண்டல விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் போராடி வரு கிறது. இதன்தொடர்ச்சியாக கரூர் ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியு றுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக் கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித் தார். மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு இயக் கத்தின் தலைவர் ராமலிங்கம், ஒருங் கிணைப்பாளர் சதீஸ் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல 2007 ஆம் ஆண்டு உக்கடம் பகுதியில் அரசின் அடுக்குமாடி குடியிருப் புகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் கீழே 200க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் இருந்தன. இந்த விபத் தில் அவர்களின் உடமைகள் அனைத்தும் சேதமடைந்து நிர்க்கதியாய் நின்றனர். தற்போதும் வீடில்லாமல் தவிக்கும் இம்மக் களுக்கு குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்கி தரவேண்டும். மேலும் ஆதிதிராவி டர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ஏரளமான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை நிலம் அடையாளம் கண்டு அளந்து கொடுக்கப்படவில்லை. உடனடியாக இம் மக்களுக்கான நிலத்தை அளந்து கொடுக் கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் வலியுறுத்தினார்.